Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

தனியாக தவிக்கின்றேன் - Part 3 - Tamil Gay Sex Story

தனியாக தவிக்கின்றேன் - பகுதி 1,2 யைப் படித்து விட்டுத் தொடரவும்
 
தனியாக தவிக்கின்றேன் - பகுதி 3
 
இன்று:

என் கண்கள் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தது.கதவை தள்ளிக்கொண்டு முதலில் டாக்டரும் அவருக்கு பின்னால் என்னவனும் வந்து கொண்டிருந்தான்.இவன் ஏன் இத்தனை களைப்பாக இருக்கிறான் மற்றவர்கள் எல்லாம் எனக்கு மங்கலாக தெரிந்தாலும் இவன் மட்டும் மிக பிரகாசமாக தெரிகிறானே அது எப்படி?அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை கண்டதும் இத்தனை காதல் கொண்டுள்ள நீ ஏன் அவ்வாறு கூறினாய் என்று நினைத்துக்கொண்டேன். என்னருகில் வந்ததும் அவனை பார்த்து கண்ணசைத்தேன் என்னருகில் வருமாறு, மீண்டும் கண்ணசைத்தேன் என்னை நோக்கி முகம் குனிந்தான் அவன் அருகில் வந்ததும் என் மாஸ்கை கலட்டும் படி சைகையால் கூறினேன் அவன் டாக்டரை பார்க்க டாக்டர் நோ நோ என்றபடி வந்தார் பின் என்ன நினைத்தாரோ ஒன்லி டூ மினிட்ஸ் என்றவர் அவனை நோக்கி ரொம்ப பேசாதீர்கள் ஹி இஸ் ஸ்டில் இன் கிரிடிகல் ஸ்டேஜ் என்று சொல்லியவாறு அனைவரும் சிறிது விலகி நின்றனர்.அவன் என்னைப்பார்த்து நின்றான் அவன் கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் நிற்க வில்லை அவன் கைகளை பிடித்தேன் ஐம் சாரி என்றேன் என் வாயை அவன் கை கொண்டு பொத்தினான் கையை விளக்கிய நான் மிகவும் கஷ்டப்பட்டு பட் இட்ஸ் ட்ரூ அண்ட் ஐ லவ் யு என்றேன் அவன் கண்களில் மிகவும் துயரமான ஒளியை கண்டேன் அவன் என்னைப்பார்த்து ஈவன் ஐ டூ என்றான்.என் கண்கள் மிக பிரகாசமானது இதயம் மிக வேகமாக துடிக்க துவங்கியது மூச்சு விட பிரயாசமானது கண்கள் மேல் நோக்கி சொருகியது அவன் டாக்டர் டாக்டர் என்று கூவியதை கேட்டேன் பலர் தட தட என ஓடி வரும் ஒலியை கேட்டேன்.
 
 
அன்று:
 
அன்று முழுவதும் அவனை ஆபீசில் பார்க்காததால் மிகவும் ரெஸ்ட்லஸ்ஸாக இருந்தேன் இரவானதும் நான் அவனின் மொபைலில் அழைத்தேன் அவன் எடுக்க வில்லை மீண்டும் அழைத்தபோது எடுத்தான்.என்னை உதாசீனம் செய்கிறானோ என்கிற கோபத்தில் நீ எங்கே இருக்கே என்றே கொஞ்சம்  அதிகார தொனியில் கேட்டு விட்டேன் எனக்கு கொஞ்சமும் சளைக்காமல் ஏன் வீட்டில் தான் என்றான் அவனும் அதே தொனியுடன். உன் வீடு எங்கேயிருக்கு என்று நான் கேட்கவும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று அவன் திருப்பி கேட்டான். எனக்கு உன்னுடன் பேச வேண்டும் என்றேன் அலுவல் விஷயம் என்றால் நாளை காலை பேசிக்கொள்ளலாம் வேறு விஷயங்கள் பேச வேண்டிய அவசியம் எனக்கு உங்களிடம் இல்லை என்று சொல்லி கால் கட் செய்தான் எனக்கு அவமானகரமாக போய் விட்டது இவன் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் அவன் மனதில் நீ பேச விருப்பமில்லை என்றால் நான் விட்டு விடுவேனா என்று கருவிக்கொண்டே அவனின் வீட்டு அட்ரெஸ் ஆபீசில் கேட்டுப்பெற்றேன் நேராக அவனை பார்த்து விடுவது என்றபடியே அவனின் வீட்டை சென்றடைந்தேன் வீட்டு வாசலில் இருந்து ஹார்ன் அடித்தேன் எட்டிப்பார்த்த அவன் ஒரு நிமிடம் திகைத்தான் போலும் பின் மெதுவாக என்னை நோக்கி வந்தான். கார் கதவை திறந்து ஏறு என்றேன்  ஒன்றும் பேசாமல் ஏறி அமர்ந்தான்.,கார் அருகிலிருந்த பார்க்கை நோக்கி சென்றது.காரை லாக் செய்து விட்டு உள்ளே சென்றோம் ஆள் அதிகமில்லாத ஒரு இருக்கையில் அமர்ந்தோம். சொல்லுங்க என்ன விஷயம் என்றான்.என் போன் காலை கட் செய்த கோபத்தில் அவனைப்பார்த்து  ஏன் இப்படி செய்தாய் என்றேன்? அவன் வெடுக்கென்று  ஹலோ செய்ததெல்லாம் நீங்கள் இப்பொழுது என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்க உங்களுக்கு வெட்கமாயில்லை என்றான்.ஒரு நிமிடம் அதிர்ந்து போனாலும் இவன் மும்பை விஷயத்தை குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து நான் செய்த முறை வேண்டுமானால் தவறிருக்கலாம் ஆனால் நீயும் தான் அதற்கு காரணம் என்றேன். சீ இப்படி சொல்ல உங்களுக்கு அசிங்கமாயில்லை என்றான் இதில் வெட்கப்பட என்னயிருக்கிறது எனக்கு உன்னை பிடித்திருக்கிறது டாம் இட் ஐ லவ் யு வாட்ஸ் ராங் இன் இட் என்று என் நிலையை இப்பொழுது தைரியமாக கூறினேன்.ஒரு நிமிடம் நிதானித்த அவன் இப்படி உங்கள் தந்தை முன் சொல்வீர்களா என்றான் இல்லை நம் ஆபீசில் வைத்து அனைவர் முன்னாலும் கூறுவீர்களா என்றான். நான் அனைவரிடமும் நீங்கள் மும்பையில் நடந்து கொண்ட அசிங்கத்தை சொல்லவா?உங்களின் கௌரவம் என்னாவது மரியாதயாக என்னை விட்டு போய் விடுங்கள் என்று சொல்லியவாறு என் முகம் கூட பார்க்காமல் வேகமாக சென்றான்.அதிர்ந்து கூசி கூனி குறுகிய நான் வேகமாக செல்லும் அவனை ஒரு நிமிடம் என்றேன் திரும்பாமல் என்ன என்பதை போல நின்றான். இப்படி என் மனதை கொன்று விட்டு செல்லும்  நீ இதற்காக ஒரு நாள் வருந்துவாய் பட் இட் வில் பி டூ லேட் பை தட் டைம் என்று சொல்லி நானும் வண்டியை வேகமாக எடுத்தேன். மணி பதினொன்றை தாண்டி விட்டது. எங்கு செல்கிறேன் எதை நோக்கி செல்கிறேன் ஒன்றும் தெரியவில்லை. என் மூளை எனக்கு கட்டளையிட மறுக்கிறது.மனம்போன போக்கில் செல்வது என்பது இது தானா?. கும்மிருட்டாக இருக்கிறது. முன் செல்லும் வாகனங்கள் என் வேகத்தை கண்டு ஒதுங்கி பயந்து செல்கிறது.
 
என்னுடைய ஸ்பீடா மீட்டர் 160ஐ தொடுகிறது இனியும் அழுத்துகிறேன் இருந்தும் வண்டியில் ஒரு குலுக்கல் இல்லை. புதிய இறக்குமதி வண்டியல்லவா.நான்கு வழி ஆறு வழி சாலைகளில் இந்த பாரிகார்ட் மற்றும் செப்பரேட்டர் பெரிய தொல்லை. என் எண்ணத்திற்கு குறுக்காக இவை இருக்கிறது. இதோ நான் எதிர்பார்த்த ஒரு சாலை இரண்டு தடங்களும் ஒன்று சேரும் இடம் இங்கு தான் நான் நினைத்ததை நிறைவேற்ற வேண்டும். இனியும் அழுத்துகிறேன் வண்டி என் கை மீறி செல்கிறது எதிரில் ஏதோ ஒரு வாகனம் லாரியாக இருக்க வேண்டும் அவன் இடது பக்கமாக ஓடிக்கிறான் நான் இனியும் அதை நோக்கி வேகமாக....
 
டமார்........
 
பெரும் சத்தத்துடன் என் வண்டி மோதுகிறது வண்டியிலிருந்து பலூன் விரிகிறது. சூடாக ஒரு திரவம் வழிகிறது என் ரத்தமாக தான் இருக்க வேண்டும். நான் மெதுவாக என்  சுயநினைவை இழக்கிறேன்.
 
 
இன்று:

நான் அருகில் சென்றதும் தன் மாஸ்கை கலட்டும் படி சைகையால் கூறினார் எனக்கு பதட்டமானது நான் பதறி டாக்டரை பார்க்க அவர் நோ நோ என்றபடி வந்தார் பின் என்ன நினைத்தாரோ ஒன்லி டூ மினிட்ஸ் என்றபடியே என்னை நோக்கி ரொம்ப பேசாதீர்கள் ஹி இஸ் ஸ்டில் இன் கிரிடிகல் ஸ்டேஜ் என்று சொல்லியவாறு அவரும் மற்றவரும் சிறிது விலகி நின்றனர்.நான் அவரைப்பார்த்து கொண்டே நின்றேன் இவரின் இந்த நிலைக்கு நான் தான் காரணமா என எண்ணியதும் என் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது அவர் மெதுவாக என் கைகளை பிடித்தபடி ஐம் சாரி என்றார் ஏற்கனவே உடைந்து போயிருந்த நான் சட்டென்று அவர் வாயை என் கை கொண்டு பொத்தினேன் என் கையை விளக்கிய அவர் பட் இட்ஸ் ட்ரூ அண்ட் ஐ லவ் யு என்று மிகவும் கஷ்டப்பட்டு கூறினார். எதை சொல்ல நான் பயந்தேனோ எது நடந்து விட கூடாது என்று எனது உணர்சிகளை அடைத்து வைத்திருந்தேனோ அது மடை திறந்த வெள்ளம் போல பாய்ந்தது அவரைப்பார்த்து ஈவன் ஐ டூ என்றேன்.இதை கேட்பதற்காக தான் காத்திருந்தது போல அவரின் முகமும் கண்களும் ஜொலித்தது, ஆனால் அடுத்த நொடி அவரின் முகம் வேதனையில் துவண்டது அவர் மூச்சு விட கஷ்டப்பட்டார் அவரின் கண்கள் மேல் நோக்கி சொருகியது எனக்கு பரபரப்பும் தவிப்பும் பற்றிக்கொண்டது டாக்டர் டாக்டர் என்று கத்தினேன்.அருகிலிருந்த டாக்டர்கள் உடன் ஓடி வந்தனர்,அவரின் மாஸ்க்கை உடனே பொருத்தினர் என்னை வெளியில் போக சொன்னார்கள் துக்கம் தொடையை அடைக்க வெளியில் வந்த நான் அவரின் அன்னையை கண்டதும் கதறி அழ தொடங்கினேன்.
 
அன்று:

அவரின் அறியாமையை நினைத்து எனக்கு இரக்கம் தோன்றினாலும் இதை இப்படியே விடக்கூடாது என்றெண்ணிய நான் அவரை பார்த்து கொஞ்சம் காட்டமாகவே இதை இப்படியே உங்கள் தந்தை முன் சொல்வீர்களா என்றேன் அதோடும் விடவில்லை இல்லை நம் ஆபீசில் வைத்து அனைவர் முன்னாலும் கூறுவீர்களா என்றேன். இருந்த கோபத்தில் சொல்லகூடாத ஒன்றையும் சொன்னேன் நீங்கள் மும்பையில் நடந்து கொண்ட அசிங்கத்தை நான் அனைவரிடமும் சொல்லவா?உங்களின் கௌரவம் என்னாவது மரியாதையாக என்னை விட்டு போய் விடுங்கள் என்று மிக கடினமாக நான் சொல்லியவாறு அவரின் முகம் கூட பார்க்காமல் என் வீடு நோக்கி நடந்தேன் ஒரு நிமிடம் என்று அவரின் குரல் கேட்டது அவரின் குரல் மிகவும் கலங்கியிருந்தது போல் உணர்ந்தேன் ஆனால் எங்கே திரும்பினால் என் மனஉறுதி உடைந்து விடும் என்பதால் அங்கேயே நின்றேன். இப்படி என் மனதை கொன்று விட்டு செல்லும் நீ இதற்காக ஒரு நாள் வருந்துவாய் பட் இட் வில் பே டூ லேட் பை தட் டைம் என்ற அவரின் குரல் பிசிறியது.எனக்கு மிக கஷ்டமாக போய் விட்டது எனினும் இன்று இப்படி சொல்லவில்லலை என்றால் அவருக்கும் ஏன் எனக்கும் கூட நல்லதில்லை என்று தோன்றியது. அவர் வேகமாக வண்டியில் என்னை கடந்து சென்றார்.வீட்டை அடைந்த நான் பலவாறு யோசிக்க தொடங்கினேன். இவரிடம் எப்படி இதை சொல்லி புரிய வைப்பது. இன்று நான் கொஞ்சம் கடுமையாக தான் நடந்து கொண்டேனோ?அந்த வார்த்தையை சொல்லியிருக்க வேண்டாமோ? அவரின் அழகுக்கும் படிப்பிற்கும் அந்தஸ்திற்கும் நான் எப்படி பொருத்தமாவேன்? முதலில் இதை இந்த சமூகம் ஏற்குமா? அவரின் வார்த்தைகள் கேட்க நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்து வருமா? அவர் என்னிடம் எதை கண்டு மயங்கினார்? எனக்கும் தான் அவரை பிடித்திருக்கிறது ஆனால் அது அவர் எண்ணும் படிதானா? எனக்கு புரியவில்லையே இருந்தாலும் அவரை இத்தனை கடிந்திருக்க கூடாதோ. என் வார்த்தைகளை கேட்டதும் அவர் மனம் வெகுவாக புண்பட்டதோ? ஏன் அந்த வார்த்தையை நான் பிரயோகித்தேன். எல்லாம் என்னுடைய திமிர்த்தனம் தானோ அவர் அடிக்கடி சொல்வதைப்போல?ஏன் அனைத்திற்கும் இத்தனை அவசரப்படுகிறார்? பொறுமை என்பதை அவரின் தந்தையிடமிருந்து சிறிதேனும் பெற்றிருக்கலாம்.அவர் கிளம்பி செல்லும் போது ஏன் அப்படி சொல்லி சென்றார்.ஏதேனும் விபரீதத்தில் கொண்டு முடியுமோ? மனம் வெகுவாக அடித்துக்கொண்டது. அவரின் கைபேசியை அழைத்துப்பார்த்தால் என்ன? தாங்கள் அழைத்த தொலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று மறுமொழி வந்தது. செல்லை அணைத்து விட்டாரா என்ன? ஒன்றும் புரியவில்லையே......? இதோ அவரின் கைபேசியில் இருந்து அழைப்பு வருகிறது யார் மறுமுனையில் பெரும் இரைச்சலுடன் சைரன் சத்தம் கேட்கிறது ..........
 
இன்று:
 
மீண்டும் எனக்கு மயக்கம் வந்தது.இவன் டாக்டர் டாக்டர் என்று கூவியதையும் பலர் தட தட என ஓடி வரும் ஒலியையும் கேட்டேன்.ee  இப்பொழுது எனக்கு எல்லாம் இருட்டாகி போனது.பழையபடி வெறும் குரல்கள் மட்டுமே என் காதில் விழுந்தது.இவனின் விசும்பல் சத்தமும் அவனை தயவுசெய்து வெளியேபோங்க என்று யாரோ சொல்லும் சத்தமும் மட்டுமே கேட்டது.என்னால் முன்போல் என் கைகளை அசைக்க முடியவில்லை. அவன் கடைசியாக சொன்ன ஈவன் ஐ டூ என்று சொன்ன வார்த்தைகள் மட்டும் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது பல இரைச்சல்கள் என்னை நிலைகொள்ள செய்தது.ஆனால் அவனின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் என் காதில்.நான் தூக்கத்தில் எங்கோ செல்வதை போல உணர்ந்தேன்.யாரோ என் நெஞ்சை அமுக்குவது போல் உணர்ந்தேன் ஆனாலும்  அது எனக்கு சிறிதும் வலிக்க வில்லை.என்னை யாரோ அழைத்து செல்வதை போல உணர்ந்தேன் ஏன் இங்கு இவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது அங்கு செல்லவேண்டும் போல மனம் துடிக்கிறதே அது ஏன்?சரி போய் தான் பார்போமே என்றெண்ணினேன்  சட்டென ஒரு அடைப்பிலிருந்து வெளியேறியதை போல இருந்தது இப்பொழுது மிக லேசாக உணர்ந்தேன்.என்னால் இப்பொழுது அனைவரையும் பார்க்க முடிந்தது டாக்டர்கள்,உடனிருக்கும் நர்ஸ்கள் அவர்களின் பரபரப்பு அங்கு படுத்திருப்பது யார்? என்னை போல இருக்கிறது ஆம் அது நான் தானே என்னை அவர்கள் என்ன செய்கிறார்கள் என் நெஞ்சில் கைவைத்து குத்துகிறார்கள் ஏன் நான் ஏன் அங்கு படுத்திருக்கிறேன்?நான் காற்றில் பறப்பது போல அல்லவா இருக்கிறேன் என் தேகம் அங்கிருக்கிறது ஆனால் நான் அனைவரையும் பார்க்கிறேன் இது எப்படி? என் முகத்தை ஏன் துணி கொண்டு மூடுகிறார்கள்? மாஸ்கை கலட்டி விட்டார்கள் ஏன் அங்கு பீப் பீப் என்று மானிட்டர் ஒலிக்கிறது அப்படியானால் என்ன? என்னால் இப்பொழுது வெளியே செல்ல முடிகிறதே வெளியில் என் அப்பாவும் அம்மாவும் இருக்கிறார்கள் இவன் ஏன் என் அம்மாவிடம் அழுது கொண்டிருக்கிறான்?எனக்கு ஒன்றும் இல்லை நான் சரியாகி விட்டேன் அம்மா அம்மா என்று அழைக்கிறேன் அவனை போய் தொடுகிறேன் ஆனால் அவன்  திரும்பகூட இல்லை ஏன். இப்பொழுது அந்த டாக்டர் வெளியில் வந்து என் அப்பாவிடம் ஏதோ சொல்கிறார். அப்பா ஏன் தலையில் அடித்து அழுகிறார்?அம்மாவும் என் பெயரை சொல்லி ஏன் அழுகிறார். இவன் இதோ மயங்கி விழுகிறான் டாக்டர் உடனே அவனிடம் விரைகிறாரே அவனின் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார் அவன் சார் என்று கூக்குரலிடுகிறான். என் அம்மா என்னை விட்டு போய் விட்டாயே என்று ஏன் அழுகிறார் நான் இங்கு தானே இருக்கிறேன் சிறிது நேரத்தில் என்னை வெளியில் கொண்டு வந்தார்கள் என் கன்னத்தை பிடித்து என் அம்மா அழுதார்கள் என் உடல் முழுவதும் வெள்ளை துணியில் மூடப்பட்டிருந்தது ஆம்புலன்சில் ஏற்றினார்கள் யாராவது ஏறுங்கள் என்று சொன்னார்கள் அவன் உள்ளே சென்றான் என்  தலை மாட்டில் போய் இருந்தான். என் கன்னத்தை மெதுவாக தொட்டான் எனக்கு ஒன்றும் தெரியவில்லை அவன் கண்ணிலிருந்த பார்வை என்னை என்னவோ செய்தது அது தான் காதலா? இதை என்னிடம் சொல்லியிருந்தால் இப்படி ஆகியிருக்குமா?ஆம்புலன்ஸ் புறப்பட்டது  வெளியில் ஏதோ பாட்டு கேட்டது ....
 
வெளியில் வந்த நான் அவரின் அம்மாவை கண்டதும் கதறி அழ தொடங்கினேன் அவர் என்னாயிற்று என்று என் கையை பிடித்து அமைதிப்படுத்தினார் இல்லை அவருக்கு மூச்சு முட்டுகிறது ஒரு நிமிடம் தான் பேசினோம் அதற்குள் மீண்டும் அவருக்கு என்னவோ ஆயிற்று என்று சொல்லிகொண்டிருந்த என்னை அவர் ஆறுதல் படுத்தினார் உன்னை கண்டு பேசினானா? அவன் என்ன சொன்னான் என்று அவர் கேட்கவும் நான் என்ன சொல்வது என்று யோசிக்கும் பொழுதே கதவை தள்ளிக்கொண்டு டாக்டர் வந்தார் அவரின் தந்தையை அழைத்து ஏதோ சொல்ல அவர் தலையை அடித்து கொண்டு அழுதார் என்னை விட்டு அவரை பார்த்து ஓடிய அவரின் அம்மா அவரின்பெயரை சொல்லி அழவும் எனக்கு தலை சுற்றியது மயங்கினேன் மீண்டும் கண் விழித்த பொழுது டாக்டர் அருகிலிருக்கிறார் நான் சார் என்று அலறினேன் என்னருகில் ஏதோ குளிர்ச்சியாக உணர்ந்தேன் என்னருகில் எங்கோ அவரிருப்பதை போன்று தோன்றியது எல்லாம் முடிந்து விட்டதா அவ்வளவு தானா? இதற்கு தான் என்னை அழைத்தாரா?ஓவென்று கூக்குரலிட்டு அழுதேன். அவர் இங்கு எங்கோ நிற்கிறார்  அது எனக்கு நன்றாக தெரிந்தது அவரின் நறுமணம் என் நாசியில் அடித்துக்கொண்டேயிருந்தது.  எல்லாம் என்னால் தான் என்பதை நினைத்த பொழுது என் மீதே எனக்கு வெறுப்பு வந்தது. நான் ஈவன் ஐ டூ என்று சொன்னது தான் அவரின் உயிர் பிரிவிற்கு காரணமா? என் கண்ணில் கண்ணீருக்கு பதில் ரத்தம் வழிவதைப்போல உணர்ந்தேன். அவரின் உடல் வெளியில் வந்தது ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது யாராவது ஏறுங்கள் என்று சொன்னார்கள் நான் வெடு வெடுவென வேகமாக உள்ளே சென்றேன் அவரின்  தலை மாட்டில் போய் இருந்தேன் அவர் கடைசியாக என்னை கண்டு சிரித்த அதே முகம் இப்பொழுது மிக பிரகாசமாக இருந்தது.நான் அவரின் கன்னத்தை மெதுவாக தொட்டுப்பார்த்தேன் அது  மிருதுவாக இருந்தது என் கண்ணிலிருந்த காதல் இப்பொழுதேனும் அவருக்கு தெரிந்திருக்குமா? நாம் சேர்ந்து வாழ முடியாது என்று பயந்தது உங்களுக்கு புரியாமல் போய் விட்டதே நான் என்ன தவறு செய்தேன் எனக்கு ஏன் இந்த தண்டனை வாழ் நாள் முழுவதும் என்னை இப்படி ஒரு கொலைகாரனாகி விட்டீர்களே, நீ இதற்காக ஒரு நாள் வருந்துவாய் பட் இட் வில் பி டூ லேட் பை தட் டைம் என்ற அவரின் குரல் எனக்கு மீண்டும் வந்து போனது இதை நினைத்து தான் சொன்னீர்களா? இந்த குற்ற உணர்ச்சியுடன் இனி எப்படி வாழ்வேன். ஒரு கே உணர்வு முழுவதுமாக  இல்லாத என்னிடம் இப்படி அவரப்பட்டது யார் தவறு.என்னிடம் சொல்லி புரிய வைத்திருந்தால் ஒரு வேளை நாம் இருவரும் இணைந்திருக்கலாமே அதற்கு ஒன்றும் வழி செய்யாமல் இப்படி நீங்கள் மட்டும் என்னை விட்டு விட்டு சென்றது நியாயமா? நான் இனிமேலே என்ன செய்வேன் எனக்கு கண்ணீரும் வரவில்லை.வறண்டது கண்ணீர் மட்டுமல்ல என் வாழ்கையும் தான்.  இப்பொழுது. அவரையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன்.
 
 
 
ஆம்புலன்ஸ் புறப்பட்டது வெளியில் எங்கோ பாட்டு கேட்டது
 
போ நீ போ
போ நீ போ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோட விளையாட விதி செய்தல் அன்பே போ
 
ஒ ஒ ஒ ..
ஒ ஒ ஒ ..
 
தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ
 
 
முற்றும்
 
 

2 comments:

  1. It is easy to take off clothes & have sex. But to open your Soul to someone, letting them know your thoughts, dreams, fears, hopes, spirit....That's being Real Naked.
    Looking fwd to get real naked with someone.... interested girls from tamilnadu can contact me at my whatsapp number :+917639578730

    ReplyDelete
  2. Any unmarried girl in Chennai interested in sex can reach me at suresh40hot at gmail for safe sex.

    ReplyDelete