Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

இது ஆண்களுக்கான அலசல் - Must Read


ஆண்களுக்கு சொல்லித்தர நாதியில்லை
 
பொதுவாக வயதிற்கு வருதல் என்பது ஆண் பெண் ஆகிய இருபாலாருக்கும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வுதான்.  இதில் பெண்களுக்காவது பரவாயில்லை, புட்டு சுற்றுகிறேன் பேர் வழி என்று ஏரியா பெண்கள் எல்லாம் கூடி, தங்கள் வயதிற்குவருதல் அனுபவத்தைபற்றி பேசி பகிர்ந்துக் கொள்கிறார்கள், அதனால் பெண்களுக்கு தங்கள் வயதிற்குவரும் சமாசாரம் பற்றி தெளிவு ஏற்படிகிறது.
 
பாவம், ஆண்குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் இருப்பதில்லை. இவன் வயதிற்கு வந்தால், அம்போ என்று அப்படியே  விடப்படுகிறான். என்ன ஏது என்று சொல்லித்தர நாதியே இருப்பதில்லை. விளைவு, ஆண் குறியில் இருந்து தூக்கத்தில் அவனை அறியாமல் விந்து வெளியேறும் அல்லது அவனை அறியாமல் சுய இன்பம் செய்து ஆணுறுப்பில் இருந்து விந்து வெளியேறும். வயதுக்கு வருதல்.. விந்து வெளியேறும் அறிகுறியை இவன் ஏதோ பெரிய விபரீதம் என்று எண்ணி கலவரம் கொள்கிறான். இருக்கவே இருக்கிறார்கள் போலி டாக்டர்கள், இந்த சாதரண உடலியக்கத்தை பெரிய வியாதி மாதிரி பில்ட் அப் கொடுத்து இவர்கள் அச்சுறுத்த, “அய் நான் வயதுக்கு வந்துட்டேனே,” என்று எண்ணி பெருமை கொள்ள வேண்டிய வாலிபன், “அய்யோ, எனக்கு வியாதி வந்துவிட்டது” என்று தவறாக எண்ணி கவலை கொள்கிறான்.
 
”விந்து வெளியேறிவிட்டது, அதனால் சாகக் கிடக்கிறேன்” என்ற புகாருடன் ஆலோசனை பெறவரும் இளைஞர்களின் எண்ணிக்கை நல்லவேலையாக இப்போதெல்லாம் குறைந்துக்கொண்டுவருகிறது. தமிழ்நாட்டு ஆண் சிங்கங்கள் எல்லாம் அறிவியலை புரிந்துக்கொண்ட அறிவாளிகள் ஆகிவிட்டார்கள்போல. அப்படியே, தப்பித்தவறி, ஒன்றிரண்டு ஆண்கள் இப்பிரச்சனையோடு வந்தாலும், அவர்களது பயத்தை கிளப்பும் மூடநம்பிக்கைகளை தெளிவுபடுத்தி, அநாவசிய பதட்டத்தை தணிக்கும் மருந்துகளை கொடுத்தாலேபோதும், ” இதெல்லாம் ஒரு மேட்டருனு யாராவது கவலை படுவாங்களா!”என்று மாறிவிடுகிறார்கள் ஆண்கள்.
 
13 - 15 இல் பெரும்பாலும் ஒரே வயது ஆண்கள் தங்கள் சுய இன்ப அனுபவங்களைப் பகிரும் போது.. தானும் வயதுக்கு வந்து விட்டேனா என்று பரிசோதனை செய்ய பல ஆண்கள் சுய இன்பத்தை பழகிக் கொள்கிறார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் வயதுக்கு வருவதில்லை. பின்னர் தான் சுய இன்பம் செய்வது தவறா என்று எண்ணி பயப்படுகிறான். தெளிவா சொன்னா சுன்னிய சுத்தி முடியோ அல்லது அரும்பு மீசை வளர ஆரம்பித்தாலோ.. நீயும் வயதுக்கு வந்து விட்டாய்! அது வரை காத்திரு நண்பா..
 
இயற்கை உன் உடலுக்கும் பரம்பரை அலகுகளுக்கு ஏற்றால் போல் தான் உன் ஆண் உறுப்பையும் வளர்ச்சியடையச் செய்யும். ஆகையால் மற்ற ஆண்களுடன் உன் ஆண் உறுப்பை ஒப்பிடாதே. நீ உன் ஆண் உறுப்பை நேசி. உன் இடுப்பளவிற்கு(Waist Size) ஏற்ற அழகான கவர்ச்சியான ஜட்டிகள் அணிந்து உன்னை மேருகூட்டு.
 
உன் ஆண்மையை உன் ஜீன்ஸ்/ஷார்ட்ஸ் ஊடாக ஒரு பொட்டலம் போல் காட்ட வேண்டும் என்றால் Low rise Underwear(Low Rise Briefs) வாங்கி அணி. இது சாதாரண Brief அதாவது V Shape உள்ளாடையை விட உன் ஆண்மையை அப்பட்டமாக வெளிக்காட்டும். கவர்ச்சியாகவும் இருக்கும் அல்லது Boxer Brief உம் பயன்படுத்தலாம்.
 
ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை

1. உடலுறவுக்குப் பின் ஆழ்ந்த உறக்கம் தேவை.
பொதுவாகவே இரவில் உடலுறவு கொள்வது தான் சிறந்தது. ஏனெனில் உடலு றவுக்குப்பின் ஆண்-பெண் இருவருக்குமே ஆழ்ந்த உறக்கம் தேவை.
காரணம் உடலுறுப்புப் பகுதி க்கு ஆகிசிஜனேற்றம் கொ ண்ட ரத்த ஓட்டம் மிக மிக அவசியம். அது ஆழ்ந்த உறக்கத்தில்தான் கிடைக்கிறது. இரவில் எத்தனை முறை உடலுறவு கொண்டாலும் உடனே ஆழ்ந்த உறக்கம் கொள்ளுவதால் இந்த ஆகிச்ஜனேற்றம் பெற்ற ரத்த வோட்டம் மிகுகிறது.
இதனால் ஆணுறுப்பின் எழுச்சியும் பெண்ணுறுப்பின் கிள்டோரிஸ் எழுச்சியும் அதிகப்படுகிறது. அடுத்தநாள் உறவுகொள்ளும்போது புத்துணர்ச்சி பெற்று மீண்டும் எழுச்சிக்கு இந்த ஆழ்ந்த உறக்கம் அதிக உறுதுணை செய்கிறது. எனவே இந்த டிப்ஸை எப்போதும் மறவாதீர்கள்.
ஒருசிலர் பகலில் உடலுறவு கொள்ள நேரிடுகிறது. குடும்பச்சூழல் காரணமாகவும் குழந்தைகள் பள்ளிக்கு ச் சென்ற பிறகும் சில நேரங்களில் இது தவிர்க்க முடியாததாகிறது..
அவர்களுக்கும் எனது அறிவுரை என்ன என்றால் குறைந்தபட்சம் அரைமணி நேர மாவது உடலுறவுக்குப் பின் உறங்கி எழுவது பயன் தருவதாகும்.
 
2. நீண்ட நேர விறைப்புக்கு சிகரெட்டை தவிர்ப்பது சிறந்த வழி.
ஆராய்ச்சிகள் கூறுவது என்ன என்றால் புகைப் பழக்கம் இல்லாதவர்களின் விறைப்பு நேரத்திற்கும் புகைப் பழக்கம் உள்ளவர் களின் விறைப்பு நேரத்திற் கும் கணி சமான வேறுபாடு உள்ளது என்பதே.
புகைப்பழக்கம் அதிகரிக்கஅதிகரிக்க விறைப்புத்தன் மையும் குறைகிறது என்பதே ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து தெளிந்த உண்மை.
மேலும் புகைப்பழக்கம் இருந்தவர்கள் அதை விட் டொழிந்த ஒரே மாதகாலத்தில் விறைப்புத் தன்மை யின் நேரம் கணிசமாக அதிகரித்ததையும் ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
எனவே இல்லறசுகம்வேண்டுவோ ர் புகைப்பிடித்தலைத் தவிர்ப்பதே சிறந்த வழியாகும்.
புகை காமத்திற்குப் பகை..!

3. ஆணுறுப்பின் மொட்டுப்பகுதி மிக மிக மென்மையானது.
ஆணுறுப்பின் மொட்டுப்பகுதியும் பெண்ணுறுப்பின் கிளிடோரிஸும் ஒரே வகை யான திசுக்களாலும் 8 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட உணர் விழைகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது.
இந்த மொட்டுப்பகுதி கடின மான தாக்குதலையும் கரடு முரடான பொருளின் மேல் உராய்தலையும் சந்தித்தால் அப்பகுதியில் உணர்வுகள் இழப்பதோடு corposa cavernosa, the elongated “erectile chambers” எனப்படும் விறைப்புத்தன்மைக்கு காரணமான ரத்தக்குழாய் திசுக்கள் பாதிப்படைந்து விறைப்பு நிலை பாதிக்கப்படுகிறது.
மேலும் அந்தப்பகுதியில் ரத்தக்கட்டும் ரத்தக்கசிவும் மிகவும் ஆபத்தானது. எதேச்சையாக அடிபட்டாலோ ரத்தக்கசிவு நேர்ந்தாலோ 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை மேற்கொள்ளப்படா விட்டால் ஆண் உறுப்பு சிதைந்தும் செயலற்றும் போக வாய்ப்பு இருக்கிறது. அதைப் பெட்டகம் போல் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம்.
ஒருசிலர் உடலுறவின் போது மிக மிக வேகமாக பெண்ணுறுப்புக்குள் இயங்குவார்கள். அச்சமயத்தில் பெண்களின் pelvic bone எனப்படும் இடுப்பெலும்பு கூடும் இடமான பகுதியில் மிகுந்த பல மான தாக்குதலை மேற்கொண்டுவிட வாய்ப்பு இருக்கிறது. இதனாலும் ஆணுறுப்பு மொட் டு சிதைய வாய்ப்பிருக்கிறது.
பெண் ஆணின்மேல் இருந்து இயங்கும்போது இந்த தாக்குதல் நடக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதால் அந்த சமயத்தில் மிகுந்த கவனம் தேவை.
நிதானம் இந்த விஷயத்திலும் தேவைதானே..?

4. நடைப்பயிற்சியும் விறைப்புத்தன்மையும்.
தினந்தோறும் 20 நிமிடங்கள் அல்லது 2 கிலோமீட்டர் தூரம் நடப்பதால் ஆண் தன்மை அதிகரித்து விறைப் புத்தன்மை அதிகரிப்பதாக செக்ஸாலஜிஸ்ட்கள் கருதுகிறார்கள். இதை ஆய்விலும் நிரூபித்து இருக்கின்றனர்.

வாங்க தினமும் 2கிமீ நடப்போம்.. விறைப்பில் வாகை சூடுவோம்..

5. சர்க்கரை நோயும் விறைப்பு த்தன்மையும்
ரத்தத்தில் சுகர் இருப்பவர்க ளுக்கு ஆண்மைத்தன்மை பறிபோகிறது. ரத்தத்தில் குளுகோசின் அளவு அதிகரிப்பதால் ஆர்ட்டிரியல் நோ யை அதிகரிப்பதோடு உணர்வு களைக் கூட்டும் நரம்பு களைப் பாதித்து விறைப்புத்தன்மை கணிசமாகக் குறைகிறது.
தக்க நேரத்தில் பரிசோதனையும் ரத்தத்தில் க்ளூகோஸ் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்து க்கொள்வதும் இப்பிரச்சனையைக் குறைக்கும்.
35வயதுக்குமேற்பட்டவர்கள் அனைவருமே ரத்தத்தில் சுகர் அளவை பரிசோதித்து தக்க மருந்தை உட்கொள்வது இந்நிலையைத் தவிர்க்கும்.

6. ஆயில் மசாஜ்
தினமும் ஒருமுறை குறைந்தது இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஆலிவ் ஆயில், அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு ஆணுறுப்பை உருவிகொடுப்பதால் ஆண்குறிக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து புத்துணர்வை தருகிறது.
 
 
ஆண்குறி பற்றி ஆண்களுக்கு இருக்கும் தவறான எண்ண‍ங்கள்
 
ஆண்களுக்கு இருக்கும் ஆண்குறி பற்றிய தவறான எண்ண‍ங்களும் சிந்தனைகளும் ஆண்களிடம் பல்கிப் பெருகியுள்ள‍ன• அவை என்னென்ன என்பதை இந்த
ஆண்களுக்கான அலசல் என்ற பகுதியில் காண்போம்.
 
ஆண்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளில் 90%  ஆண்குறி சார்ந்தவையாக இருக்கின்றன என்கிறார்.
 
1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.
2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.
3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.
4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.
5. ஒரு சொட்டுவிந்து 40–100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.
6. சுய இன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.
7.இரவில் உறங்கும்போது விந்து வெளிப்பட்டால். அது பெரும் நோய்.
8. ஆண் எந்நேரமும் செக்ஸிக்கு தயாராக இருப்பான்.
9. எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.
10. ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.
11. முதல் முறையிலேயே அவன் பெண்ணை உச்சத்திற்கு கொண்டுபோய் விடுவான்.
12. திருமணத்திற்கு முன் விந்து வெளியேறிவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு ஆண்மை போய்விடும்.
என்ன 12 மூடநம்பிக்கைகளைப் பற்றியும் படித்துவிட்டீர்களா. சரி இந்த 12 ம் தவறென்றால் எது உண்மை என அறியும் ஆவல் ஏற்பட்டால் கீழே செல்லுங்கள்.
 
விளக்கங்கள்
 
1. ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில்லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத் தினை அடைந்துவிடும்.
2. விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணுறுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.
3. ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.
4. விரைகள் சமமாக இருந்தால்தான் பிரச்சனை. பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன் றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.
5. ஒருமுறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உட ல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம்.
6. சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகாது. அதிகமாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் பிரட்சனை. (பெண்களும் சுய இன்பம் செய்கின்றார்கள் என ஒத்துக்கொள்கின்றார் மாத்ரூ)
7. இது இயற்கையாக நடக்கும் நிகழ்வு சுய இன்பம் செய்து வெளியேற்றாவிட்டால், உங்கள் வீட்டில்மோட்டார் போட்டு தண்ணிரை தொட்டிக்கு அனுப்புகிறீர்கள். தண்ணீர் தொட்டி நிரம்பியபின் வழிந்தால், அதை தவறு என்பீர்களா. உங்களுக்கு பதில் விந்தை இயற்கையே வெளியேற்றி விடுகிறது. அவ்வளவுதான்.
8. உணர்ச்சிகள் உள்ளவன் தானே மனிதன். அவனுக்கு எல்லா வகையான உணர்வுகளும் தோன்றும். காமமும் இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.
9. இப்படியெல்லாம் கதைகள்தான் சொல்லமுடியும். உண்மையில் நடக்காத காரியம் இது.
10. செக்ஸ் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய பங்கில்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது.
11.சித்திரமும்கைப்பழக்கம் என்று சொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும். முதல் முறையில் மோகம் வேண்டுமானால் தணியலாம் என்கிறார் மாத்ரூ.
12.திருமணத்திற்குமுன் செய்யும் செயலால் ஆண்மை போய்விடும் என்றால், திருமணத்திற்கு பிறகு செய் தாலும் போய்விடும் அல்லவா.
எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்.
 
 
ஆண்களின் பிறப்பு உறுப்புப் பகுதியில் உண்டாகும் அரிப்பைத் தடுப்ப‍து எப்ப‍டி?
 
பிறப்புறுப்பில்பெண்களுக்கு மட்டும்தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும்.

சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும்போது, தலையில்
கை வைத்தாலே அசிங்கமாக இருக்கும்போது, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும்போது பொது இடங்களில் அங்கு கை வைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா என்ன ?
 
ஆகவே பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட ஆரம்பிக்கும் போது, அதனை சரிசெய்வதற்கான முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். குறிப்பாக இப்படி அரிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:
* சுத்தம் இல்லாமை
*இறுக்கமான உள்ளாடை அணிவது
* சிறுநீர்
* அந்தரங்க பேன்

பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களை தடுப்பதற்கான வழிகள்:

* தினமும் குளிக்கும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவ வேண்டும். அதிலும் நுனித்தோலை நீக்கிவிட்டு, மைல்டு சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஏனெனில் அந்த இடத்தில் தான் ஆரோக்கிய மற்ற பாக்டீரியாக்களானது இருந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.

* குறிப்பாக பிறப்புறுப்பை கழுவும் போது, கெமிக்கல் அதிகம் உள்ள பொருட்களைப் எப்போதும் பயன்படுத்தக்கூடாது. அதுவே கடுமையான அரிப்புக்களை ஏற் படுத்தும்.

* எப்போதும் நல்ல மென்மையான, லூசாக இருக்கும் காட்டன் உள்ளாடைகளை அணிய வேண் டும். இதனால் காட்டனானது பிறப்புறுப்பில் ஈரம் தங்குவதை தடுக்கும். ஏனெனில் ஈரமுள்ள இடத்தில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.

* பிறப்புறுப்பில் அரிப்புகள் அதிகம் இருந்தால், தினமும் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்ற வேண்டும். மேலும் அப்படி மாற்றும்போது, பிறப்புறுப்பை நன்கு கழுவி பின் போட வேண்டும்.
 
* பிறப்புறுப்பை சூழ உள்ள முடிகளை Shave செய்ய வேண்டாம். அதிகமாக இருந்தால் மாத்திரம் கத்தரிக்கவும்.
 
கை முட்டி அடித்த‍ல்/கை அடித்தல்/கையிலடித்தல்/சுய இன்பம்/ மேட்சுபேஷன்/ கைப்பழக்கம் என்பதை மாதம் கூடியது இரண்டு முறை செய்யலாம்.
அளவுக்கு அதிகமாக செய்தால் அது உங்களை அடிமையாக்கும்.  நீங்கள் செய்யாவிட்டாலும் ஆரோக்கியமாக இருந்தால் மாதம் ஒரு முறையாவது உங்களை அறியாமல் ஆபாசக் கனவுகள் மூலம் இரவில் வெளியேறும்.இதுவும் இயற்கையே. அடுத்த நாள் காலை தலையில் குளித்து உடைகளை தோய்த்து காயவிடவும்.
 
சுய இன்பப் பழக்கம் உள்ளவர் களால் செக்ஸ் வாழ்க்கையில் மனைவியை திருப்திபடுத்த முடியாதா ?
ஒரு உண்மைத் தெரியுமா உங்களுக்கு 100 ஆண்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் 99 பேர் திருமணத்துக்கு முன்பு சுய இன்பப்பழக்கத்தினை மேற்கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

மீதம் இருக்கிற ஒருவர் ‘தான் சுய இன்பப் பழக்கத்தினை மேற்கொண்டதில்லை’ என்று பொய் சொல்பவராக இருப்பார்.

சில ஆண்களுக்கு திருமணத்துக்கு முன்பு சுய இன்பப்பழக்கம் இருந்திருக்கும். இத்தகைய பழக்கத்தினை கொண்டிருந்த பல ஆண்கள் திருமணத்துக்கு பின்பு ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார்கள்.

அதாவது தங்களிடம் பல நாட்கள் தொற்றிக் கொண்டு இருந்த சுய இன்பப்பழக்கம் ஆனது, திருமணத்துக்கு பின்பு தங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதித்து இனிமையான சங்கீதமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவை குழி தோண்டிப் புதைத்து விடுமோ என்று அஞ்சுவார்கள்.

இவர்களுக்கு ஒரு நம்பிக்கையான டானிக் அறிவுரை என்னவெனில் சுய இன்பப்பழக்கம் என்பது தவறான நடவடிக்கை அல்ல. அது மனித வாழ்க்கையில் இயல்பானது.
கடந்த நூற்றாண்டுகளில் சுய இன்பப்பழக்கம் என்பது ஒரு பாவகாரியமாக கருதப்பட்டது. மனிதனை படைத்து, காத்து வருகிற கடவுளுக்கு செய்கிற துரோகமாகக் கருதப்பட்டது.
 
அதற்கு பிந்தைய காலக்கட்டத்தில் அந்நாளைய மருத்துவர்களே சுய இன்பப்பழக்கம் என்பது ஒரு மனநோய் என்று தப்புப்பிரச்சாரம் செய்து வந்தனர்.

ஆனால், இன்றைய நாட்களில் சுய இன்பப்பழக்கம் என்பது ஒரு இயல்பான செக்ஸ் நடவடிக்கை என்று ஆகிவிட்டது. இதனை மருத்துவ உலகமும் சரியானது என்று அங்கீகரித்துவிட்டது.

சுய இன்பப்பழக்கமானது உடலை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதனை மருத்துவ உலகம் அறிவியல் பூர்வமாக நிரூபித்து விட்டது, எனவே எந்த ஒரு கணவனும் தனது முந்தைய சுயஇன்பப்பழக்கத்தை எண்ணி கலக்கமடைய வேண்டாம்.

சுய இன்பப் பழக்கம் என்பது ஒருவரது உடம்பிலேயே ஆரம்பித்து அவரது மூளையை சென்றடைந்து இன்பக் கிளர்ச்சி அடைய வைத்து அவருக்குள்ளேயே முடிந்துவிடும்.
தாம்பத்திய சுகம் என்பது ஒருவர் இன்னொருவருக்குக் கொடுப்பதுடன் ஒருவர் இன்னொருவரிடமிருந்து பெறுவது. எனவே…  சுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பும்  கிடையாது. ஆகவே எந்த ஒர் ஆணும் தான் எப்போதோ சுயஇன்பம் அனுபவித்ததை நினைத்து நினைத்து மனத்தளர்ச்சி அடையத் தேவையில்லை.
யாராவது சுய இன்பப் பழக்கம் உள்ளவர்களால் செக்ஸ் வாழ்க்கையில் மனைவியை  திருப்திபடுத்தமுடியாது என்று சொன்னால்… நல்லா பீதியைக் கிளப்புறாங்கப்பா என்று ஒரு சிரிப்பை சிந்திய படி அந்த இடத்தை விட்டு நடையைக் கட்டிவிடுங்கள்.
 
எப்பொழுதும் ஒரு காண்டம் பக்கெட் உடன் இருக்கட்டும். நம்பிக்கை இல்லாதவருடன் காண்டம் இன்றி உடலுறவு வேண்டாம்.
 

No comments:

Post a Comment