Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

அரைஞான் கயிறு or அருநாக்கயிறு அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும்


அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..

உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா? நிச்சயமாக இல்லை.அந்த அரைஞாண் கயிற்றில் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்......

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.

இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெர்ணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.

கருப்பு கலர் மட்டுமல்ல சிகப்பு மற்றும் மஞ்சள் கலரிலும் அரை ஞான் கயிறு கட்டுவார்கள். நிறம் அந்தந்த குடும்ப வழக்கம்.

மேலும் உயிரோடு இருக்கும் வரை கண்டிப்பாக இடுப்பில் (அரை) இருக்க வேண்டும். கயிறு அப்பாதான் கட்ட வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு அவர்கள் பருவம் அடையும் வரை கண்டிப்பாக கயிறு டன் தான் இருக்க வேண்டும்.

கறுப்பு கயிறு பழையதாகி விட்டால் முதலில் புதுக்கயிறைக் கட்டி விட்டு பழையதை கழிக்க வேண்டும்.

அரைஞான் கயிறு அருநாக்கயிறு அருணாக்கொடி எனவும் அழைக்கப்படும்.

கறுப்பு நிறக்கயிறு அணிவதே சாலச் சிறந்தது. ஏன் என்றால் கறுப்பு நிறம் உஷ்னத்தை தன்னுள் இழுத்து வைக்கும். இதனால் அதை அரையில் கட்டுவதன் மூலம் அந்தரங்க உறுப்புப் பகுதியில் காணப்படும் அதிக உஷ்னத்தை இது இழுத்துக் கொள்ளும். இதனால் குழந்தை இன்மை பிரச்சனை பிற்காலத்தில் வருவது குறைகிறது.

கட்டும் கறுப்பு நிற அரை ஞாண் கயிறு உடலுடன் ஒட்டிய வண்ணம் சற்று இறுக்கமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இதன் பலன் முழுமையாகக் கிடைக்காது.

லுங்கி/கைலி/வேஷ்டி கட்டும் போது அரை ஞான் கயிறு கட்டி இருந்தால் அவிழ்ந்து விடும் பயம் இல்லாமல் தைரியமாக கட்டலாம்.  ஏன் என்றால் கயிறை Support இக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீரில் மூழ்கும் நிலையில் நீரில் தத்தளிக்கும் ஒருவரை பிடித்துக் காப்பாற்ற இந்த அரை ஞாண் கயிறு பயன்படும்.

சிலர் இடை மட்டும் இல்லாது, கழுத்தும் கையிலும் கட்டுவர். அதற்கு முழுக்காரணம். பாம்பு கடித்தால் உடனே அதைப் பயன்படுத்தி விஷத்தை கட்டுப்படுத்தலாம் என்பதாலாகும்.

ஆகவே அரை ஞாண் கயிறு உள்ளாடைக்காக மட்டும் கட்டப்பட்ட ஒன்று அல்ல.


No comments:

Post a Comment