Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

எய்ட்ஸ் தொற்றுவது எப்படி?

உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் நோய் எய்ட்ஸ். ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை படிப்படியாக குறைந்து, ஓருகட்டத்தில் அந்த சக்தியை முழுமையாக இழக்க வேண்டிய அபாய நிலையை ஏற்படுத்துவதுதான் இந்த நோய்.

இந்த நோயை ஒழிக்க முடியாது என்பதால், அதை கட்டுப்படுத்து வதற்காக அனைத்து உலக நாடுகளும் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன. எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைத்திருக்கும் மருந்து, மாத்திரைகளும் அந்த பணத்தில் இருந்து வழங்கப்படுகின்றன.

இந்த உதவி முழுமையாக எய்ட்ஸ் நோயாளிகளை சென்று சேர்வது இல்லை. பணக்காரன் ஒருவன் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் லட்சக்கணக்கில் செலவு செய்து இதற்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்து, வாழ்நாளை சற்று நீட்டித்துக்கொள்ளலாம்.

அதுவே ஒரு ஏழையாக இருந்தால்...?

அவனுக்கு அன்றாட சாப்பாடே பெரிய விஷயம். அப்படி இருக்கும்போது தினமும் மருந்து, மாத்திரை வாங்க பணத்திற்கு அவன் எங்கே செல்வான்? அவன் பாடு அந்தோ பரிதாபம்தான்! மரணத்தை எதிர்நோக்க வேண்டியதுதான்.

எங்கள் ஊரிலும் ஒரு பெண் உண்டு. இளம் வயதிலேயே கணவனை இழந்தவள். அதனால், அவளது வாழ்க்கைப் பாதை மாறியது. பலருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டாள். அதற்கு கிடைத்த பரிசு எய்ட்ஸ்!

2 வருடத்திற்கு முன்பு அந்த பெண்ணை, அவளது வயதான விதவைத் தாயார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து வந்திருந்தார். யதார்த்தமாக அவர்களை கவனித்தேன். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் இருந்தாள், எய்ட்ஸ் பாதித்த பெண்.

முன்பு, மிகவும் அழகாக இருந்தவள், இன்று சோமாலியா, எத்தியோப்பியா நாடுகளில் உணவு கிடைக்காமல் எலும்பும் தோலுமாக காணப்படும் பெண் போன்று காணப்பட்டாள். ஒரு அடி -கூட அவளால் எடுத்து வைக்க முடியவில்லை. அவளது தாய்தான் உதவினார்.

இந்த பெண்ணும் ஏழைதான் என்பதால், அவளது வாழ்க்கையும் சீக்கிரமே முடிந்து போயிற்று. ஆம்... அவள் இறந்துவிட்டாள்.

எய்ட்ஸ் ஒருவருக்கு வந்துவிட்டால் இறப்பு நிச்சயம். வேண்டும் என்றால், மருந்து, மாத்திரைகளைக் கொண்டு அந்த இறப்பை தள்ளிப் போடலாம். அவ்வளவுதான்!

எனக்கு தெரிந்த சித்தா டாக்டர் ஒருவர் உண்டு. பத்திரிகைகளில், எய்ட்ஸ் குணமாகும் அதிசயம்! என்று விளம்பரம் கொடுப்பார். அதைப் பார்த்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் அவரைத் தேடி வருவார்கள். சில மூலிகை மருந்துகளை கொடுப்பார். ஒரு வாரம், 2 வாரம் அவரது மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியிருந்து, சில-பல ஆயிரங்களை  செலவு செய்துவிட்டு செல்வார்கள்.

ஒருநாள் அந்த டாக்டரிடமே கேட்டேன்.

"அது எப்படி எய்ட்ஸ் குணமாகும்? அதற்கு மருந்தே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையே... நீங்கள் எந்த மருந்தைக் கொடுத்து குணப்படுத்துகிறீர்கள்?"

"எய்ட்சுக்கு மருந்து இல்லைதான். ஆனால், நம்பிக்கை இருக்கிறது அல்லவா?" என்று திருப்பிக் கேட்டார். நான், புரியாமல் விழித்தேன். அவரே அதை விளக்கினார்.

"எய்ட்ஸ் வந்துவிட்டால் மரணம் நெருங்கிவிட்டது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த மரணத்தை நினைத்து பயந்து பயந்து தினமும் செத்துக்கொண்டிருந்தால், 10 வருடத்தில் வரவேண்டிய மரணம் 5 வருடத்திலேயே ஏன்... ஒரு வருடத்தில்கூட வந்துவிடலாம்.

நான் என்னிடம் வரும் நோயாளிகளுக்கு மருந்தாக கொடுப்பது ஆரோக்கியம் தரக்கூடிய சித்த மருந்துதான். அதை நோயாளியிடம் கொடுத்து, இதை சாப்பிடு. எய்ட்ஸ் குணமாகிவிடும் என்று நான் சொன்னால், அதை அந்த நோயாளி நம்பிக்கையோடு சாப்பிடுவான். அவனுக்கு, நாம் சாக மாட்டோம் என்ற தைரியம் வந்துவிடும். அப்புறம் என்ன... 10 வருடத்தில் இறக்க வேண்டியவன், கூடுதலாக 5 ஆண்டுகள் உயிர் வாழ்வான்..." என்று விளக்கம் கொடுத்தார்.

இதுதான் உண்மை. எய்ட்சை குணப்படுத்த முடியாது. ஆனால், அதனால் வரும் மரணத்தை தள்ளிப் போடலாம்.

* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஊக்கம் கொடுத்தல்
* மருந்து, மாத்திரைகள் முறையாக கிடைக்கச் செய்தல்
* அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுதல்
* நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல்
* அவ்வபோது கவுன்சலிங் பெறுதல்
* வாழ்க்கையை மகிழ்ச்சியாக உணருதல்
* சமுதாயத்தால் புறக்கணிக்கப்படாமை
* குறிப்பாக, நோய்கள் வராமல் உடலை பாதுகாத்துக் கொள்ளல்
* வாழும் இடத்தை சுத்தமாக - ஆரோக்கியமாக வைத்திருத்தல்

- இந்த சூழ்நிலைகள் ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு கிடைத்தால் அவரது மரணத்தை 5 முதல் 10 ஆண்டுகள் வரை தள்ளிப்போடலாம்.

வாழ்ந்து மகிழ வேண்டிய வாழ்க்கையை எளிதில் முடிக்கும் எய்ட்ஸ் நோய்க்கு நாம் பலியாக வேண்டுமா?

என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், செக்ஸ் தேவையை மனைவியுடன் மட்டும் வைத்துக்கொண்டால், இந்த நோயில் இருந்து தப்பிவிடலாம். ஆசை அபரிமிதமாக பொங்கும்போது அதற்கு வடிகாலாக விபச்சார தொழில் செய்யும் பெண்களை தேடிச் செல்வது சில இளைஞர்களது வழக்கம்.

விபச்சார பெண்ணிடம் தங்களது ஆசையை தற்காலிகமாக தணித்துக்கொள்ளும் அந்த இளைஞர்கள், அதன்பின் ஏற்படப் போகும் பாதிப்புகளை அறியத் தவறிவிடுகிறார்கள். எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி விடுகிறார்கள்.

அப்படியே, விபச்சார அழகியுடன் உல்லாசமாக இருக்கும்போது, சில பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால், எய்ட்ஸ் பாதிப்பில் இருந்து தப்பித்து விடலாம். இந்த பாதுகாப்பு முறைகள் இன்றைய இளம் தலைமுறையினர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

1. எய்ட்ஸை தடுக்கும் முதன்மையான தடுப்பு சாதனம் காண்டம் தான். இதை, மனைவி அல்லாத பிற பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் ஆண்கள் நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும். அந்த ஆண் அணியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பெண், அதை அவர் அணிந்து கொள்ளுமாறு வலியுறுத்த வேண்டும். அந்த ஆணுக்கு எய்ட்ஸ் இருந்து, பெண்ணுக்கு எய்ட்ஸ் இல்லாமல் இருந்தால், இந்த பாதுகாப்பற்ற உறவின் மூலம் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் வந்துவிடும்.

2.    அடுத்து மனக் கட்டுப்பாடு. அழகான பெண்ணை பார்த்தால் அவளுடன் பழக வேண்டும் என்ற ஆசை மட்டுமல்ல; அவளுடன் உறவு  வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசைகூட ஏற்படும். அவளுக்கு எய்ட்ஸ் இருந்தால் நாமும் அந்த நோய்க்கு பலியாகிவிடுவோம். மனதை அடக்க பழகிக்கொண்டால் எய்ட்ஸ் பக்கமே போக வேண்டியது இருக்காது.
அடுத்ததாக, உறவு வைத்துக்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை இங்கே பார்ப்போம்.

எய்ட்ஸ் நோய் பரப்பும் வைரஸ், அது பாதித்த நோயாளியின் ரத்தத்தில் மட்டுமே கலந்து பெருகியிருக்கும். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்க எட்டாகி... இப்படி பல்கி பெருகக்கூடியது அதன் இயல்பு.

செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும்போது ஆண், பெண்ணின் அந்தரங்க உறுப்புகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எல்லோருக்கும் அந்தரங்க உறுப்பின் அளவுகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில ஆண்களுக்கு ஆணுறுப்பு பெரியதாக இருக்கும், சிலருக்கு சிறிய அளவில் இருக்கும் (செக்ஸ் திருப்திக்கு அளவு முக்கியமே கிடையாது. ஆண் உறுப்பின் விரைப்புதான் முக்கியம். ஏனென்றால், பெண்ணின் அதிகப்படியான உணர்ச்சி நரம்புகள், அவளது அந்தரங்க உறுப்பின் மேல் பகுதியிலேயே உள்ளன. அதை தூண்ட சிறிய விரைப்பான ஆண் உறுப்பே போதுமானது).

இதேபோல், சில பெண்களுக்கு அவர்களது அந்தரங்க உறுப்புகள் பெரியதாக, அதாவது பெண் உறுப்பு துளையின் அளவு பெரியதாக இருக்கும். சில பெண்களுக்கு சிறியதாக இருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெரிய ஆணுறுப்பு கொண்டவனும், பெரிய துளையுள்ள பெண்ணுறுப்பு கொண்டவளும் உறவு கொண்டால், அவர்களுக்கு திருப்தியும் கிடைக்கும். ஒருவேளை அவர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு எய்ட்ஸ் இருந்தாலும்கூட, அது மற்றவருக்கு தொற்றாமல் தவிர்த்துவிடலாம்.

அதாவது, உறவின்போது ரத்தக் கலப்பு ஏற்பட்டால் மட்டுமே, ஒரு எய்ட்ஸ் நோயாளியிடம் இருந்து, எய்ட்ஸ் வைரஸ், அந்த நோய் பாதிப்பு இல்லாதவருக்கு தொற்றிக்கொள்ளும். ரத்த கலப்பு இல்லை என்றால், எய்ட்ஸ் பாதித்தவருடன் உறவு கொண்டாலும் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்துவிடலாம்.

அது எப்படி?

ஒரு சிறிய உதாரணம் :

அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ். அவளிடம் உறவு கொள்ள வந்த ஆணுக்கு எய்ட்ஸ் கிடையாது. இருவரும் உறவு வைத்துக்கொள்கிறார்கள். எய்ட்ஸ் உள்ள பெண்ணுக்கு, அந்தரங்க உறுப்பு சிறிய துளை கொண்டது. ஆணின் உறுப்போ பெரியது. முழு விரைப்பில் உள்ள தனது உறுப்பை, அவளது உறுப்புக்குள் முட்டி போராடித்தான் அவள் செலுத்துகிறான். அவளது உறுப்புக்குள் சென்ற அவனது பெரிய ஆணுறுப்பு தொடர்ந்து அவனால் மேலும் கீழுமாக இயங்க வைக்கப்படுகிறது.

அந்த பெண்ணின் உறுப்பு சிறியது என்பதால் அவளுக்கு வலிக்க ஆரம்பிக்கிறது. அதேநேரம், அவளது உறுப்பு, பெரிய ஆணுறுப்பை உள் வாங்கிக்கொள்ள முடியாமல் விரிந்து கொடுக்கிறது. அதனால், அவளது உறுப்பில் விரிசல் ஏற்பட்டு, ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

அதேபோல், ஆணின் உறுப்பும் அந்த பெண்ணின் உறுப்புக்குள் கஷ்டப்பட்டு நுழைந்ததால் அவனது உறுப்பிலும் லேசான காயம் ஏற்பட்டு, ரத்தமும் கசிய ஆரம்பித்துவிடுகிறது.

இப்போது அவளது உறுப்பிலும் ரத்தக்கசிவு. இவனது உறுப்பிலும் ரத்தக்கசிவு. இரண்டு பேரது ரத்தமும் கலக்கிறது. எய்ட்ஸ் பாதித்த பெண்ணின் ரத்தத்தில் உள்ள எய்ட்ஸ் வைரஸ், ஆணின் ரத்தம் வெளியாக அவனது உடலுக்குள்ளும் பிரவி விடுகிறது. இதுதான், எய்ட்ஸ் தொற்றிக்கொள்ளும் விதம்.

அதேநேரம், இருவரது அந்தரங்க உறுப்புகளும் சம அளவில், அதாவது பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருந்திருந்தால், ரத்தக்கசிவு ஏற்படாமல் எய்ட்ஸ் தொற்றுவதற்கான வாய்ப்பு நிறைய குறைந்து இருக்கும்.

இப்படி ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் ரத்தக் கசிவோடு சந்தித்துக் கொண்டால்தான் எய்ட்ஸ் தொற்றும் என்பதில்லை. எந்த வகையில் எய்ட்ஸ் பாதித்த ஒருவரது ரத்தம் இன்னொருவருக்கு கலந்தாலும், பாதிப்பு அல்லாதவருக்கு நோய் வந்துவிடும்.

வேறு எப்படியெல்லாம் எய்ட்ஸ் பரவலாம்?

சம்பவம் 1 :

நீங்கள் (ஒரு ஆண்) சாலை வழியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். மொபட்டில் வந்த இளம்பெண் ஒருவர் விபத்தில் சிக்கி காயமடைந்து கிடக்கிறார். ரத்தம் வழிய வழிய கிடக்கும் அவளுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. அவளுக்கு எய்ட்ஸ் இருப்பது அவளுக்கு மட்டுமே தெரியும். அவளைப் பார்த்த நீங்கள் பரிதாபப்பட்டு உதவி செய்ய முன்வருகிறீர்கள். உங்களுக்கு ஏற்கனவே நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. சம்பவம் நடந்த அன்று கூட அவ்வாறு நகம் கடிக்கப்போய் நகக்கண்ணில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டது.

அந்த கையோடு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் எய்ட்ஸ் பாதித்த பெண்ணை தூக்குகிறீர்கள். அவளது ரத்தமும், உங்கள் நகக்கண்ணில் கசிந்த ரத்தமும் உங்களுக்கு தெரியாமலேயே கலக்கிறது. அப்பாவியான நீங்களும் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி விடுகிறீர்கள்.

இதனால்தான், ரத்ததானம் கொடுக்கும்போது, அவர்களுக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்று பரிசோதிக்கிறார்கள்.

பின்குறிப்பு : மேற்படி உதாரணத்தை காரணம் காட்டி, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவருக்கு உதவி செய்யாமல் விட்டு விடாதீர்கள். உங்கள் உடலில் காயம் இருந்தால் மாத்திரம் சற்று விலகி நில்லுங்கள். அதற்காக, விபத்தில் சிக்குபவர்கள் எல்லோருக்கும் எய்ட்ஸ் இருக்கும் என்று கருதக்கூடாது அல்லவா? மேற்படி சம்பவம் நடக்க வாய்ப்புகள் குறைவுதான். அதனால், தைரியமாக மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சம்பவம் 2:

நீங்கள் (ஒரு ஆண்) முடி திருத்தம் செய்ய செல்கிறீர்கள். உங்களுக்கு முன்பு எய்ட்ஸ் பாதித்த ஒருவர் முடிவெட்டி, ஷேவிங் செய்துவிட்டு சென்றிருக்கிறார். அவருக்கு பயன்படுத்திய பிளேடை, முடி திருத்துபவர் உங்களுக்கும் பயன்படுத்துகிறார். முன்னதாக, எய்ட்ஸ் பாதித்தவரிடம் அவர் பிளேடை பயன்படுத்தியபோது லேசாக நோயாளியை வெட்டிவிடுகிறார். அதனால் ஏற்பட்ட ரத்தம் இந்த பிளேடில் ஒட்டி இருக்கிறது. முடித் திருத்தம் செய்பவர், அதே பிளேடால் உங்களையும் கீறி விடுகிறார். அதாவது, ஷேவிங் செய்யும்போது முகத்தில் காயம் ஏற்படுத்தி விடுகிறார். அதனால், இங்கேயும் எய்ட்ஸ் உள்ள ஒருவரது ரத்தம் எய்ட்ஸ் அல்லாத ஒருவரிடம் கலந்து நோயை ஏற்படுத்தி விடுகிறது.

பின்குறிப்பு : பொதுவாக, எய்ட்ஸ் கிருமி உடலை விட்டு வெளியில் வந்த ஒருசில நிமிடங்களில் இறந்துவிடும். மேற்படி உதாரணத்தில் அதற்கான வாய்ப்புகள் உண்டு என்றாலும், குறைவான வாய்ப்புதான். அதற்காக, பீதி கொள்ள தேவையில்லை. ஏன் நமக்கு வம்பு? பேசாமல் புது பிளேடை பயன்படுத்தச் சொல்லுங்கள். அப்படி செய்தால், எய்ட்ஸ் பாதிப்பு மட்டுமின்றி, வேறு எந்த மாதிரியான தோல் நோய் தொற்றுதலில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்.

சம்பவம் 3:

நீங்கள் ஒரு ஆண். போதை ஊசி போட்டுக்கொள்ளும் வழக்கம் உண்டு. உங்கள் நண்பர்களுடன் ஒரே சிரஞ்சியில் போதை மருந்தை உடலில் செலுத்தி பரிமாறிக்கொள்கிறீர்கள். உங்களுக்கே தெரியாமல், எய்ட்ஸ் பாதித்த விபச்சார பெண் ஒருத்தியுடன் உல்லாசம் அனுபவிக்கப்போய் எய்ட்சை வாங்கிக்கொண்டு வந்த நண்பனும் உங்களுடன் அந்த போதை ஊசியை போட்டுக்கொள்கிறார். இப்போது, எய்ட்ஸ் பாதித்த நண்பருக்கு முன்பு நீங்கள் போதை ஊசியை பயன்படுத்தி இருந்தால் உங்களுக்கு எய்ட்ஸ் வராது. அவருக்கு பிறகு நீங்கள் பயன்படுத்தினால் நிச்சயம் உங்களுக்கு எய்ட்ஸ் வந்துவிடும். அதனால், போதை ஊசி போடும் பழக்கம் எய்ட்ஸ் வருவதற்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

மனைவி உடனான செக்ஸ் உறவு மட்டுமே எய்ட்ஸ் ஏற்படாமல் தடுக்கும். அதனால், உஷாராக இருங்கள். ஆசையை மனைவியோடு நிறுத்திக்கொள்ளுங்கள். எய்ட்ஸ் இல்லா உலகத்தை உருவாக்க துணை நில்லுங்கள்.

- நெல்லை விவேகநந்தா

1 comment:

  1. It is easy to take off clothes & have sex. But to open your Soul to someone, letting them know your thoughts, dreams, fears, hopes, spirit....That's being Real Naked.
    Looking fwd to get real naked with someone.... interested girls from tamilnadu can contact me at my whatsapp number :+917639578730

    ReplyDelete